ADDED : ஜூன் 22, 2024 05:50 AM
விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் குற்றவியல் சட்ட மாற்றங்களை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார்.
அட்வகேட் அசோசியேஷன் தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் அலாவுதீன், பார்த்தீபன், பிரகாஜ், பிராங்க் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், குற்றவியல் சட்ட மாற்றங்களை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.