ADDED : ஜூன் 10, 2024 01:25 AM
விழுப்புரம் : காணை அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
காணை அடுத்த கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகள் புஷ்பா, 20; இவர், கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்து விழுப்புரத்தில் உள்ள வங்கிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.