ADDED : ஜூலை 07, 2024 04:20 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகள் கலைச்செல்வி,24; இவர், பி.எஸ்.சி., பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டிலிருந்தார். இவர், நேற்று முன்தினம் முதல் திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தாய் இந்திரா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து பெண்ணை தேடி வருகின்றனர்.