ADDED : ஜூன் 04, 2024 05:20 AM
விழுப்புரம், : விழுப்புரம் அருகே இரு தரப்பினர் மோதல் சம்பவத்தில், 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த தெளி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் பன்னீர்செல்வம், 28; அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் வேலாயுதம், 31; இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் வேலாயுதம், கடந்த 2ம் தேதி இரவு தனது உறவினர்களுடன் சென்று, பன்னீர்செல்வத்தையும், அவரது உறவினரான பிரபாவதி, 37; என்பவரையும் தாக்கினார். மேலும், வீட்டின் முன் நிறுத்தியிருந்த பன்னீர்செல்வத்தின் மாருதி காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், வேலாயுதம் மற்றும் அவரது உறவினர்களாக வீரமுத்து, 28; அண்ணாமலை, 52; சண்முகம் மனைவி வள்ளி, 37; பூங்காவனம், 38; பன்னீர்செல்வம், 28; பரந்தாமன், 40; பால்ராஜ், 24; சுமதி, 45; பிரபாவதி, 37; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, வேலாயுதம், அண்ணாமலை, பரந்தாமன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.