ADDED : ஜூலை 12, 2024 06:32 AM
விழுப்புரம்: வளவனுார் அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் நேற்று ஆர்.ஆர்.பாளையம் கிராமத்தில் உள்ள மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு, மாட்டு வண்டியில் மணல் கடத்திய புதுச்சேரி மாநிலம், கரியமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன், 48; அருள்மணி, 40; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.