/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இரு தரப்பினர் மோதல் 11 பேர் மீது வழக்கு இரு தரப்பினர் மோதல் 11 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் மோதல் 11 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் மோதல் 11 பேர் மீது வழக்கு
இரு தரப்பினர் மோதல் 11 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 02, 2024 11:11 PM
விழுப்புரம் : திண்டிவனம் அருகே பைக்கில் வேகமாக வந்ததால் ஏற்பட்ட தகராறில் 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திண்டிவனம் அடுத்த பாம்பூண்டி காலனியைச் சேர்ந்தவர் மூர்த்தி, 50; இவர், தனது வீட்டின் முன் கடந்த 30ம் தேதி மாலை தனது மருமகளுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த, திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்துார் தங்கதுரை மகன் லோகேஷ், 20; கதிரேசன் மகன் மணிகண்டன், 20; ஆகியோரை கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், வெண்மணியாத்துார் லோகேஷ், மணிகண்டன், அவரது தம்பி ராகுல், 19; மணவாளன் மகன் பாவேந்தன், 20; வேல்முருகன் மகன் குமார், 23; பாம்பூண்டி காலனியைச் சேர்ந்த அருள், 50; வசந்த், 22; கோகுல், 18; அகிலன், 20; ஆறுமுகம், 30; சத்யா, 25; ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.