ADDED : ஜூலை 21, 2024 07:40 AM

மயிலம்: மயிலம் அடுத்த விளங்கம்பாடி ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் தென்னரசு துவக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடந்தது.
மயிலம் சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார். மயிலம் பி.டி.ஓ., ரவி, வட்டார கல்வி அலுவலர் மதன் குமார் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன், மாவட்ட அமைப்பாளர்கள் அன்சாரி, செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் விஜயன், கவுன்சிலர்கள் கண்ணன், செல்வகுமார் மாவட்ட பிரதிநிதி ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.