ADDED : ஜூலை 22, 2024 01:33 AM

செஞ்சி : செஞ்சி அரசு கலை அறவியல் கல்லுாரியில் பெண்களுக்கு எதிரான கேலிபேச்சு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் லலிதா தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் வரவேற்றார். வழக்கறிஞர்கள் சக்திவேல், சுதன், முத்துராஜ் ஆகியோர் பெண்களுக்கு எதிரான கேலி பேச்சுக்களில் இருந்து பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து விளக்கிப்பேசினர்.
முகாமில் மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.