Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நகர பகுதிகளில் ஏர் ஹாரன்; வாகன ஓட்டிகள் அச்சம்

நகர பகுதிகளில் ஏர் ஹாரன்; வாகன ஓட்டிகள் அச்சம்

நகர பகுதிகளில் ஏர் ஹாரன்; வாகன ஓட்டிகள் அச்சம்

நகர பகுதிகளில் ஏர் ஹாரன்; வாகன ஓட்டிகள் அச்சம்

ADDED : ஜூலை 22, 2024 11:56 PM


Google News
விழுப்புரம் : விழுப்புரத்தில் தற்போது, அதிக சத்தத்தை எழுப்பும் இரு சக்கர வாகனங்களை இயக்குவது பேஷன் ஆகிவிட்டது. நகரின் முக்கிய வீதிகளான நேருஜி ரோடு, கே.கே. ரோடு, திரு.வி.க.,வீதி, சுதாகர் நகர் சாலை, திருச்சி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில், சிலர் அடிக்கடி நவீன பைக்குகளில், போக்குவரத்து விதிகளை மீறி, சைலன்சர் ஆல்டர் செய்யப்பட்ட வாகனங்களை கடுமையான சத்தத்துடன், அதிக ஒலியை எழுப்பிச் செல்கின்றனர்.

குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் நிறைந்த இடங்களில், இதபோன்ற பைக்குகளை அதிவேகமாகவும், அதிக சத்தத்துடன் தடை செய்யப்பட்ட ஏர் ஹார்ன்களையும் பயன்படுத்திச் செல்கின்றனர்.

இதே போன்று, லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களிலும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக நகர பகுதிகளுக்கு வரும்போது அதிகளவில் ஏர் ஹாரன்களைபயன் படுத்துகின்றனர்.

இதுபோன்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களால் சாலையில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

இதுகுறித்த புகார் எழும்போதோ அல்லது நாளிதழ்களில் செய்தி வெளியானால் மட்டுமே அன்று ஒரு நாள் நடவடிக்கை எடுக்கின்றனர். தொடர் நடவடிக்கை இல்லாததால் ஏர் ஹாரன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலரும் இணைந்து செயல்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us