ADDED : ஜூலை 09, 2024 11:32 PM
திண்டிவனம்: திண்டிவனத்தில் ஏர்ஹாரன் வைத்திருந்த 20 பஸ்கள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தார்.
திண்டிவனம்-மயிலம் ரோடு, போலீஸ் நிலையம் எதிரில் நேற்று மாலை 3 மணியளவில், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையில், ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், முருகவேல் ஆகியோர் வாகன தணிக்கை செய்தனர்.
இதில் அரசின் உத்தரவை மீறி ஏர்ஹாரன் பொறுத்தியிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களிலிருந்த 20 ஏர்ஹாரனனை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.