Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ காரீப் பருவ பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுரை

காரீப் பருவ பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுரை

காரீப் பருவ பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுரை

காரீப் பருவ பயிருக்கு காப்பீடு செய்ய அறிவுரை

ADDED : ஜூலை 08, 2024 04:54 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டு காரீப் பருவத்திற்கு, வரும் 31ம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சீனுவாசன் செய்திக்குறிப்பு:

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, பயிர் இழப்பினை ஈடுசெய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், விழுப்புரம் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா மற்றும் ராபி பருவத்திற்கு, பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில், காரீப் பருவத்திற்கு 13 தாலுகாக்களில் உள்ள 367 வருவாய் கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. காரீப் நடவு செய்துள்ள விவசாயிகள், வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டுக்கு தனியார் யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

காப்பீடு செய்ய ஒரு ஏக்கர் காரீப் பருவ நெற்பயிருக்கு 690 ரூபாய் எனவும் கடைசி நாள் வரும் 31ம் தேதி ஆகும். வேர்கடலை பயிருக்கு 590 ரூபாய், கடைசி நாள் ஆகஸ்ட் 30ம் தேதி. கம்பு பயிருக்கு 218 ரூபாய் கடைசி நாள் ஆகஸ்ட் 30ம் தேதி. வாழைக்கு 822 ரூபாய், கடைசி நாள் செப்டம்பர் 16ம் தேதி. மரவள்ளி பயிருக்கு 607 ரூபாய், கடைசி நாள் செப்டம்பர் 16ம் தேதி ஆகும்.

பொது சேவை மையங்கள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள், தேசிய வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத் தொகை செலுத்தி, பதிவு செய்யலாம். நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விபரங்களை சரியாக அளித்து, விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். வங்கிகள் மற்றும் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறும் விவசாயிகள், அவர்களின் ஒப்புதலை பெற்று பயிர் காப்பீடு செய்யலாம்.

கடைசி தேதிக்குள், காரீப் பருவத்தில் நெல், வேர்க்கடலை, கம்பு, வாழை மற்றும் மரவள்ளி பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us