ADDED : ஜூன் 26, 2024 11:00 PM
விழுப்புரம்: இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த கோலியனூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகள் சந்தியா,21; இவர், ப்ளஸ் 2 வரை படித்து முடித்துவிட்டு, புதுச்சேரி அருகே உள்ள திருபுவனை தனியார் கார் உதிரிபாகம் தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து, வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.