Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/வேலூர்/ பெண் பலாத்கார முயற்சி போதை ஆசாமி கைது

பெண் பலாத்கார முயற்சி போதை ஆசாமி கைது

பெண் பலாத்கார முயற்சி போதை ஆசாமி கைது

பெண் பலாத்கார முயற்சி போதை ஆசாமி கைது

ADDED : ஜூன் 16, 2025 03:20 AM


Google News
ஒடுகத்துார்: வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தங்கி பணியாற்றி வருகிறார். இவருக்கு, 36 வயதில் ஒரு மனைவி, மற்றும் மகன், மகள் உள்ளனர். மகனும், மகளும் வேலை மற்றும் படிப்பு காரணமாக வெளியூரில் தங்கியுள்ளனர்.

இதனால், தொழிலாளியின் மனைவி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஒடுகத்துாரை சேர்ந்த ஜெய்சங்கர், 55, என்பவர், மது போதையில் வீட்டிற்குள் நுழைந்து, 36 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சியடைந்த அவர் போட்ட கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால், ஜெய்சங்கர் தப்பினார். வேப்பங்குப்பம் போலீசார், ஜெய்சங்கரை நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us