/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ இரண்டு பேரை வெட்டி கொன்றவர் அரிவாளுடன் போலீசில் சரண் இரண்டு பேரை வெட்டி கொன்றவர் அரிவாளுடன் போலீசில் சரண்
இரண்டு பேரை வெட்டி கொன்றவர் அரிவாளுடன் போலீசில் சரண்
இரண்டு பேரை வெட்டி கொன்றவர் அரிவாளுடன் போலீசில் சரண்
இரண்டு பேரை வெட்டி கொன்றவர் அரிவாளுடன் போலீசில் சரண்
ADDED : ஜூலை 08, 2024 05:18 PM
திருச்சி:
திருச்சி மாவட்டம், முசிறி அருகே, அந்தரப்பட்டியில் வளையல் வியாபாரம் செய்யும் கீதா, 46. கணவர் முருகேசனை பிரிந்து இருந்து, இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். இவருக்கும், முசிறி அருகே வாளவந்தியைச் சேர்ந்த பாலச்சந்திரன், 64, என்பவருக்கும், தவறான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பாலச்சந்திரனிடம் கீதா, அடிக்கடி பணம் கேட்டு, தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில், பாலச்சந்திரனை தன் வீட்டிற்கு வரக்கூடாது என, அந்த பெண் கீதா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாலச்சந்திரன்், நேற்று காலை 6:00 மணி அளவில், வீட்டிற்கு சென்று கீதாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
தொடர்ந்து, வாளவந்தியில் நிலத்தகராறு காரணமாக, முன்விரோதத்தில் இருந்த ரமேஷ், 55 என்பவரையும் அரிவாளால் வெட்டினார். இதில், காயமடைந்த ரமேஷை, அப்பகுதி மக்கள் மீட்டு, முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் இறந்தார்.
அதன் பின், ஜம்புநாதபுரம் போலீசாரிடம், பாலச்சந்திரன் அரிவாளுடன் சரணடைந்தார். போலீசார், அவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
கடந்த 2003ம் ஆண்டு, இரட்டை கொலை வழக்கில் சிறை சென்ற பாலச்சந்திரன், கடந்த 2018ம் ஆண்டு தான் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.