Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ காட்டு மாடு தாக்கி முதியவர் உயிரிழப்பு

காட்டு மாடு தாக்கி முதியவர் உயிரிழப்பு

காட்டு மாடு தாக்கி முதியவர் உயிரிழப்பு

காட்டு மாடு தாக்கி முதியவர் உயிரிழப்பு

ADDED : ஜூலை 06, 2024 02:57 AM


Google News
திருச்சி:சிவகங்கை மாவட்டம், கானப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டியப்பன், 70. இவர், நேற்று முன்தினம், திருச்சி மாவட்டம், தச்சமலை வனப்பகுதிக்கு ஆடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார்.

இரவு நேரமாகியும், அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர், வழக்கமாக அவர் செல்லும் பகுதிகளில் தேடினர். நேற்று காலை, தச்சமலை வனப்பகுதியில், ஆண்டியப்பன் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டனர்.

இது குறித்து, துவரங்குறிச்சி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட வனத்துறையினர், காட்டு மாடு தாக்கி, ஆண்டியப்பன் உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர். துவரங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us