Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ ப.வேலுார் மூதாட்டி கொலையில் 2 கூலி தொழிலாளிகள் சிக்கினர்

ப.வேலுார் மூதாட்டி கொலையில் 2 கூலி தொழிலாளிகள் சிக்கினர்

ப.வேலுார் மூதாட்டி கொலையில் 2 கூலி தொழிலாளிகள் சிக்கினர்

ப.வேலுார் மூதாட்டி கொலையில் 2 கூலி தொழிலாளிகள் சிக்கினர்

ADDED : ஜூன் 11, 2025 02:54 AM


Google News
ப.வேலுார்:நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த சித்தம்பூண்டி, குளத்துபாளையத்தை சேர்ந்த ராசப்பன் மனைவி சாமியாத்தாள், 67, ஜூன் 7 இரவில் வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்திருந்த போது, மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். டி.எஸ்.பி., சங்கீதா தலைமையில், 10 தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கரூர் மாவட்டம், குளித்தலையில் பதுங்கி இருந்த குற்றவாளிகள், ஆனந்தராஜ், 29, அவரது நண்பர் அஜித்குமார், 23, ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டம், தாளம்பாடியை சேர்ந்த ஆனந்தராஜ், இறந்த சாமியாத்தாளின் தோட்டத்தில், இரண்டரை ஆண்டுகளாக வேலை செய்துள்ளார்.

அவரது நடவடிக்கையில் திருப்தி இல்லாததால், வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர்.

அதன் பின், அவ்வப்போது சாமியாத்தாளின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்து சென்றுள்ளார்.

அப்போதும் அவர் நடவடிக்கை சரியில்லாததால், சாமியாத்தாளின் மகன் கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தராஜை திட்டி அனுப்பிவிட்டார்.

நன்றாக வேலை செய்தும், சரியான சம்பளம் இல்லாமல் அவமானப்பட்ட ஆனந்தராஜ், சாமியாத்தாளை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

நண்பர் தாளம்பாடி அஜித்குமாருடன் சென்று, சாமியாத்தாளை கத்தியால் குத்திக் கொலை செய்து, டூ வீலரில் தப்பியுள்ளார் என, தெரியவந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us