Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் திருட்டு

டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் திருட்டு

டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் திருட்டு

டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் திருட்டு

ADDED : ஜூன் 25, 2024 05:19 AM


Google News
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ. 72 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த செட்டிதாங்கலில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இதன் மேற்பார்வையாளர் ஏழுமலை, 52; நேற்று முன்தினம் இரவு 10:00 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை 6:00 மணி அளவில் கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சென்று பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு, 72 ஆயிரத்து 470 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடி போயிருப்பது தெரியவந்தது.

ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us