Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ மின்வேலியில் சிக்கி பெண் பரிதாப பலி

மின்வேலியில் சிக்கி பெண் பரிதாப பலி

மின்வேலியில் சிக்கி பெண் பரிதாப பலி

மின்வேலியில் சிக்கி பெண் பரிதாப பலி

ADDED : ஜூன் 30, 2024 02:43 AM


Google News
செய்யாறு, :திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்த சங்கர் மனைவி சீதா, 35; கருத்து வேறுபாடால் கணவனை பிரிந்து, இரு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

செய்யாறை அடுத்த ஆலத்துார் கிராமத்தில், சென்னையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான மாட்டுப்பண்ணையில் பணியாற்றி வந்தார்.

இயற்கை உபாதை கழிக்க, மாட்டுப்பண்ணை அருகே உள்ள பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.

விவசாய நிலத்துக்கு அமைத்திருந்த கம்பி வேலியை கடந்த போது, மின்சாரம் பாய்ந்து பலியானார்.

வேலியில் மின்சாரம் பாய்ச்சியிருந்த தோட்ட உரி மையாளரான வெங்கடேசனை, கீழ்கொடுங்காலுார் போலீசார் தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us