Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

ADDED : அக் 16, 2025 11:20 PM


Google News
பெருமாநல்லூர்: பெருமாநல்லுார் - குன்னத்துார் ரோடு மேம்பாலம் அருகே எஸ்.ஐ., ஆர்த்தி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மொபட்டில் வந்த லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த சேர்மதுரை, 56, என்பவர் 5.3 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

வலசுபாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் விற்பனைக்காக 240 கிலோ பதுக்கிவைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us