Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறந்த தபால் சேவைகளுக்காக திருப்பூர் கோட்டத்துக்கு விருது

சிறந்த தபால் சேவைகளுக்காக திருப்பூர் கோட்டத்துக்கு விருது

சிறந்த தபால் சேவைகளுக்காக திருப்பூர் கோட்டத்துக்கு விருது

சிறந்த தபால் சேவைகளுக்காக திருப்பூர் கோட்டத்துக்கு விருது

ADDED : செப் 04, 2025 10:52 PM


Google News
- - நமது நிருபர் -

தபால் துறை சார்பில், தமிழகத்தில் வட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட கோட்டங்கள், உப கோட்டங்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசளிப்பு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இதில், திருப்பூர் அஞ்சல் கோட்டம், கடந்த நிதியாண்டில், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில், 3.09 கோடி பிரீமியம் ஈட்டி, மாநில அளவில், 2ம் இடம் பிடித்தது.

கிராமிய அஞ்சல் காப்பீடு திட்டத்தில், 2.81 கோடி பிரீமியம் ஈட்டி, 3ம் இடம், பார்சல் பதிவு வருவாய் வளர்ச்சி வீதத்தில், அதிக வளர்ச்சி பெற்ற பிரிவில், 54 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி, தமிழக அளவில், 2ம் இடம் என, முக்கியமான மூன்று பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது.

பார்சல் பிரிவில் பதிவு செய்த வருவாய் வளர்ச்சி, கடந்த, 2023-2024 நிதியாண்டை காட்டிலும், 96 சதவீதம் வளர்ச்சி பெற்றிருக்கிறது.

இதுதவிர, பிரீமியம் கணக்கு சேர்க்கை மற்றும் பொது காப்பீடு பிரிவுகளில், திருப்பூர் தெற்கு உட்கோட்டம் விருதுகளை பெற்றுள்ளது.

இந்த நிதியாண்டின் 2024-2025 விருதுகள் வழங்கும் விழாவில், கோட்ட வாரியமாகவும், உட்கோட்ட வாரியமாகவும், தனிப்பட்ட சிறப்பு செயல்பாடு என, மொத்தம், 9 விருதுகளை இக்கோட்டம் பெற்றுள்ளது.

திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறுகையில், ''திருப்பூர் கோட்டம் உட்பட அனைத்து அஞ்சலகங்களிலும், ஏ.டி.எம்., இன்டர்நெட் பேங்கிங், யுபிஐ., பேமென்ட் உள்ளிட்ட பண பரிவர்த்தனை வசதிகளும் உள்ளது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us