/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசாரம்! கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசாரம்!
கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசாரம்!
கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசாரம்!
கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டத்தில் காரசாரம்!

நீர் நிலைகள் காணாமல் போகும்!
முகிலன் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்): கல்குவாரிகளுக்கு மட்டும் சட்டவிரோதமாக எங்கிருந்தோ வெடி மருந்துகள் வருகின்றன. இதற்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சட்டவிரோத கல்குவாரிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். வெடி மருந்துகள் சட்டவிரோதமாக எவ்வாறு வருகின்றன என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த வேண்டும். அரசு வழங்கிய தொகுப்பு வீடுகள், உயர்மின் கோபுரம், விவசாய நிலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றை மறைத்து கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கும் அவசியம் என்ன? எனவே, விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லாததால், கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
கனிம வளம் எப்படி கிடைக்கும்?
விஜயகுமார் (பசுமை சூழல் அமைப்பு): மண்ணுக்கு மாற்றாக எம் - சாண்ட், பி - சாண்ட் கட்டாயம் தேவை. கல்குவாரி தொழிலுக்கு அனுமதி வழங்காவிட்டால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும். கல்குவாரி உரிமத்தை ரத்து செய்வது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும். எனவே, விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய கல்குவாரிகளுக்கு நிச்சயம் அனுமதி வழங்க வேண்டும்.


