/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/. விளையாட்டு போட்டி அட்டவணை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது. விளையாட்டு போட்டி அட்டவணை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது
. விளையாட்டு போட்டி அட்டவணை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது
. விளையாட்டு போட்டி அட்டவணை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது
. விளையாட்டு போட்டி அட்டவணை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது
ADDED : ஜூன் 16, 2025 03:47 AM
திருப்பூர்: நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) பள்ளிகளின் செயல்பாடு குறித்த நாட்காட்டி காலண்டர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தற்போது உடற்கல்வி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குனரிடம் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், முதன்மை மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்-வாளர்களுக்கு இது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 25ல் குறுவட்ட அளவிலான போட்டிகளுக்கு குழு நிர்ணயக் கூட்-டம் நடத்துதல்; ஜூன் 30ல் துவங்கி, ஜூலை 31க்குள் 14, 17 மற்-றும் 19 வயது பிரிவினருக்கு தடகளம், குழு விளையாட்டு போட்-டிகளையும் நடத்தி முடித்தல்; ஆக., 6ல் வருவாய் மாவட்ட அள-விலான போட்டியை துவங்குதல்; ஆக., 21, 22ல் மாநில அளவி-லான விளையாட்டு போட்டியை நடத்துதல் என அட்டவணை-யில் குறிப்பிடப்பட்டுள்ளது.
''எஸ்.ஜி.எப்.ஐ., எனப்படும் இந்திய பள்ளி விளையாட்டு சம்-மேளன, மண்டல விளையாட்டு போட்டியை ஆக., இறுதி வாரம் நடத்த வேண்டும்; டேக்வாண்டோ, சிலம்பம் உள்ளிட்டவை அடங்கிய புதிய விளையாட்டு போட்டிகளை செப்., 9க்குள் முடித்து, அக்., மாதம் பாரதியார், குடியரசு தின விளையாட்டு போட்டிகளை துவங்க வேண்டும்; நவ.,- டிச., மாதங்களில் மாநில குடியரசு தின புதிய விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்குவிக்கப்படும் செஸ்
தமிழகத்தில் துவக்கப்பள்ளி மாணவர்களையும் செஸ் போட்டிக்-குள் கொண்டு வரும் முயற்சியை, மூன்று ஆண்டுகளாக கல்வித்-துறை தொடர்ந்து முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நடப்பாண்டும், 11 வயதுக்கு உட்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவருக்கு பள்ளி அளவில் செஸ் போட்டி நடத்த உத்தரவிடப்-பட்டுள்ளது.