Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ படுத்த படுக்கையாக கிடந்த 70 வயதான தாய் கொலை தாராபுரம் அருகே மகன் கைது

படுத்த படுக்கையாக கிடந்த 70 வயதான தாய் கொலை தாராபுரம் அருகே மகன் கைது

படுத்த படுக்கையாக கிடந்த 70 வயதான தாய் கொலை தாராபுரம் அருகே மகன் கைது

படுத்த படுக்கையாக கிடந்த 70 வயதான தாய் கொலை தாராபுரம் அருகே மகன் கைது

ADDED : ஜூன் 16, 2025 03:48 AM


Google News
தாராபுரம்: தாராபுரம் அருகே படுத்த படுக்கையாக கிடந்த தாயை, கழுத்தை அறுத்து கொன்ற மகனை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனுார், மால-மேட்டை சேர்ந்தவர் ராஜகோபால், 42; சென்ட்ரிங் தொழிலாளி. மனைவி, ஏழு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இவரின் தாயார் மாரியம்மாள், 70; தாயுடன் வசிக்கிறார். உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக படுத்த படுக்கையாக கிடந்தார். அவரது தங்கை ஏசம்மாள், அவ்வப்போது வந்து குளிக்க வைத்து, துணி மாற்றி விட்டு செல்வார். நேற்று முன்-தினம் மதியம்

வழக்கம்போல் பணிவிடை செய்ய வந்த ஏசம்மாள், மொபைல்-போனில் ராஜகோபாலை அழைத்தார். மலம் கழித்தபடி கிடந்த சகோதரியை சுத்தம் செய்த பிறகு, தாயாரை பார்த்து கொள்ள முடி-யாதா?, என்னால் முடியவில்லை என்று புலம்பிவிட்டு, வீட்டுக்கு வெளியே துணியை காயப்போட சென்றுள்ளார்.

அப்போது குடிபோதையில் இருந்த ராஜகோபால், வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால், மாரியம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்-படி சென்ற மூலனுார் போலீசார், ராஜகோபாலை கைது செய்-தனர். இச்சம்பவம் அப்பகுதியில்

பரபரப்பை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us