Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இணைப்பு ரோடு படுமோசம்  கிராம மக்கள் வேதனை 

இணைப்பு ரோடு படுமோசம்  கிராம மக்கள் வேதனை 

இணைப்பு ரோடு படுமோசம்  கிராம மக்கள் வேதனை 

இணைப்பு ரோடு படுமோசம்  கிராம மக்கள் வேதனை 

ADDED : மே 23, 2025 12:27 AM


Google News
உடுமலை : உடுமலை அருகே கிராம இணைப்பு ரோடு குண்டும், குழியுமாக மாறி பல ஆண்டுகளாகியும், ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

குடிமங்கலம் ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமம் புதுார். கிராமத்தில் இருந்து பழையூர் வழியாக அடிவள்ளிக்கு கிராம இணைப்பு ரோடு உள்ளது. பெரியபட்டி - நெகமம் ரோட்டில் இருந்து பிரியும் இந்த இணைப்பு ரோட்டை, அப்பகுதி விவசாயிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். போதிய பராமரிப்பு இல்லாமல், ரோடு பரிதாப நிலைக்கு மாறி விட்டது; குண்டும், குழியும் அதிகரித்து, இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அவ்வழியாக செல்ல சிரமப்படுகின்றனர்.

இந்த ரோட்டை புதுப்பிக்க குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்திடம் மக்கள் மனு கொடுத்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகளை கண்டுகொள்ளாத, ஒன்றிய நிர்வாகம் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us