Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 4க்குள் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 4க்குள் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 4க்குள் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 4க்குள் விண்ணப்பிக்கலாம்

ADDED : மே 23, 2025 12:29 AM


Google News
உடுமலை : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த, 16ம் தேதி வெளியாகியது. இத்தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவ, மாணவியருக்கு, துணைத்தேர்வு, ஜூலை 4 முதல், 10ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இத்தேர்வில் பங்கேற்க, மாணவர்கள் அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் மாவட்ட கல்வி அலுவலத்தில் செயல்படும் அரசு தேர்வுகள் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்; விண்ணப்பிக்க கடைசி நாள், ஜூன், 4ம் தேதி.

* மாவட்டத்தில் அறிவியல் தேர்வெழுதியவர்களில் 631 பேர் தேர்ச்சி பெறவில்லை. அதன் துணைத்தேர்வு ஜூலை, 9ல் நடக்கிறது. செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், பயிற்சி வகுப்பில் இணைய, டி.இ.ஓ., ஆபீசில் இன்று (23ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம், என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us