Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாமனாருக்கு கத்திக்குத்து

மாமனாருக்கு கத்திக்குத்து

மாமனாருக்கு கத்திக்குத்து

மாமனாருக்கு கத்திக்குத்து

ADDED : ஜூன் 19, 2025 04:47 AM


Google News
திருப்பூர் : மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது செய்யப்பட்டார்.

பல்லடம் அருள்புரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை, 52. இவரது மகளை, திருப்பூர் பல்லடம், குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ், 27 என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.

விக்னேஷ் மது அருந்தி விட்டு, வீட்டில் தகராறு செய்து வந்தார். தம்பதி இடையே பிரச்னை எழுந்தது. மகள் வீட்டுக்கு சென்ற அண்ணாதுரை, மருமகனிடம் தகராறு தொடர்பாக தட்டி கேட்டார்.

ஆத்திரமடைந்த விக்னேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, மாமனாரை குத்தினார். காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வீரபாண்டி போலீசார் விக்னேஷை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us