ADDED : ஜன 07, 2024 12:07 AM

திருப்பூர்:ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 33வது ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
பள்ளி தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். போட்டிகளை, ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி உப தலைவர் கருப்பசாமி, தாளாளர் பாலசுப்ரமணியம், செயலாளர் செந்தில்நாதன், பொருளாளர் சந்திரசேகரன்,பெரியசாமி முன்னிலை வகித்தனர். காங்கயம் அரசு வக்கீல் முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
அதிக புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற லோட்டஸ் அணி, இரண்டாமிடம் பெற்ற ரோஸ் அணிக்கும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி உறுப்பினர்கள் துரைராஜ், ஈஸ்வரன், பாலசுப்ரமணியம், கிருஷ்ணசாமி ஆகியோர் பரிசளித்தனர். ஆசிரியர் ராஜகுமார் நன்றி கூறினார்.