/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆயுள் குறைக்கும் புகை... அறவே ஒழிக்காவிட்டால் பகை! ஆயுள் குறைக்கும் புகை... அறவே ஒழிக்காவிட்டால் பகை!
ஆயுள் குறைக்கும் புகை... அறவே ஒழிக்காவிட்டால் பகை!
ஆயுள் குறைக்கும் புகை... அறவே ஒழிக்காவிட்டால் பகை!
ஆயுள் குறைக்கும் புகை... அறவே ஒழிக்காவிட்டால் பகை!

காற்றில் பறக்கும்உத்தரவு
இதை புகைபிடிப்பவர்கள் அறிந்திருந்தும் கூட, தங்களது போக்கை மாற்றிக் கொள்வதில்லை. இதனால் தான், பொது இடங்களில் புகைப்பிடிக்க அரசு தடை விதித்தது; பொது இடங்களில் புகைபிடிப்போருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது, புகையை போன்று, இந்த உத்தரவும் காற்றில் பறக்கிறது.
வரிசைக்கட்டும் வியாதி
''தொழில் நகரமான திருப்பூரில் கூட, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால், பாதிப்போர் எண்ணிக்கை அதிகம். புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால், 15 வகையான நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்'' என்கிறார் இந்திய புற்றுநோய் மைய திருப்பூர் மைய புற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சதீஷ்குமார்.
புகையிலை இல்லா எதிர்காலம்!
புகையில்லா எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் தான், ஆண்டுதோறும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்து முன்வைக்கப்படுகிறது. இந்தாண்டின் மையக் கருத்து, 'கவர்ச்சிகரமான புகையிலைப் பொருட்கள், இருண்ட நோக்கத்தை அடிப்படையாக கொண்டது' என்பதை சுட்டிக்காட்டுகிறது.