Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சனி மஹா பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சனி மஹா பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சனி மஹா பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சனி மஹா பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ADDED : மே 24, 2025 11:25 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்: வைகாசி மாத தேய்பிறை மற்றும் சனி மஹா பிரதோஷத்தை முன் னிட்டு நேற்று திருப்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

இதையொட்டி, சிவாலயங்களில், நந்திகேஸ்வரருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்து நந்திகேஸ்வரருக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. அதன் பின், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில், சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, வெள்ளி ரிஷப வாகனத்தில், தம்பதி சமேதராக எம்பெருமான் எழுந்தருளினார். பக்தர்கள் பக்திப் பாடல்கள் இசைத்த வண்ணம் திருவீதியுலா வந்த உற்சவரை தரிசனம் செய்தனர். திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழுவினர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.

l எஸ்.பெரியபாளையத்தில் எழுந்தருளியுள்ள சுக்ரீஸ்வரர் கோவிலில் சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

மகா நந்திக்கும், மூலவருக்கும் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. நல்லுார் - விஸ்வேஸ்வரர் கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், திருப்பூர் - லட்சுமி நகர், அண்ணாமலையார் கோவில், டி.பி.ஏ., காலனி, காசி விஸ்வநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் - காசி விஸ்வநாதர்சன்னதி, அலகுமலை ஆதி கைலாசநாதர் கோவில், பூச்சக்காடு - சொக்கநாதர் சன்னதி, உள்ளிட்ட திருப்பூர் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷம் முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us