/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாலை - சாக்கடை - சுகாதாரம் - ஆக்கிரமிப்பு தீராத பிரச்னைகள்... தீர்வுக்கு ஏங்கும் மக்கள் சாலை - சாக்கடை - சுகாதாரம் - ஆக்கிரமிப்பு தீராத பிரச்னைகள்... தீர்வுக்கு ஏங்கும் மக்கள்
சாலை - சாக்கடை - சுகாதாரம் - ஆக்கிரமிப்பு தீராத பிரச்னைகள்... தீர்வுக்கு ஏங்கும் மக்கள்
சாலை - சாக்கடை - சுகாதாரம் - ஆக்கிரமிப்பு தீராத பிரச்னைகள்... தீர்வுக்கு ஏங்கும் மக்கள்
சாலை - சாக்கடை - சுகாதாரம் - ஆக்கிரமிப்பு தீராத பிரச்னைகள்... தீர்வுக்கு ஏங்கும் மக்கள்

திறந்த நிலை கால்வாய்
கோட்டை மாரியம்மன் கோவில் முன்புறம் வளைவில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் 'சிலாப்' போடாமல் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் உள்ளது; யாரேனும் விழுந்து விடும் அபாயம் உள்ளது.
செல்லப்பபுரம் பரிதாபம்
வார்டில் செல்லப்பபுரம் பகுதியின் நிலை பரிதாபமாக உள்ளது. மாநகராட்சி மூலம் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை குப்பையில் வீசப்பட்டுள்ளது. பாதையை ஆக்கிரமித்து கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. செல்லப்பபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்புறம் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு, பணி முடிக்கப்பட்டும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
சரிந்த தரைப்பாலம்
திருப்பூர் நகராட்சியாக இருக்கும் போது கட்டப்பட்ட அதே சாக்கடை கால்வாய்களே ராஜ வீதியில் உள்ளது. கால்வாய் உயர்த்திக்கட்ட வழியில்லாததால், 30 ஆண்டுகளாக இதே நிலை தொடர்கிறது. ராஜ வீதியிலாவது கால்வாய் உயரம் தான் குறைவாக உள்ளது. ஆனால், கே.எஸ்.சி., ஸ்கூல் வீதி - தாராபுரம் ரோடு சந்திப்பில் இருந்த மழைநீர் வடிகால் கால்வாய் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது.
சுகாதாரம் கேள்விக்குறி
டூம்லைட் மைதானம் ரவுண்டானா சந்திப்பில் சிறிய பூங்கா உள்ளது. பூங்காவை சுற்றி வாகனங்கள், கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டுள்ளன. பூங்கா திறக்கப்படுவதில்லை. சாலையிலேயே கார்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
குப்பை அகற்றம் சவால்
பெருமாள் கோவில் வீதி பின்புறம் துவங்கி, மத்திய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, கால்நடை மருத்துவமனை முன்புறம் ரோட்டோர கடை இரவில் அமைக்கப்படுகிறது. உணவுக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், கோவில் வீதியில் அப்படியே வீசியெறிந்து செல்கின்றனர். வார்டில் மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால், குப்பை அகற்றுவது பெரும் சவாலான பணியாக உள்ளது.
கற்கள் சீரமைக்கப்படுமா?
மாநகராட்சியின் முதல் ஸ்மார்ட் சிட்டி சாலை அரிசிக்கடை வீதியில் தான் அமைக்கப்பட்டது.ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், 'சிலாப்'கள் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்து, குழியாக துவங்கியுள்ளது.
தண்ணீர் வீண்
மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், காமராஜர் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் ஓராண்டாக வீணாகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் சரிசெய்யாததால், சாலை குழியாகி விட்டது.