ADDED : ஜூன் 12, 2025 11:27 PM

பல்லடம் அடுத்த, சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில், கோழி இன நோய் ஆராய்ச்சி மையம், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முழுமையான பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
நேற்று, அமைச்சர் சாமிநாதன் இங்கு ஆய்வு மேற்கொண்டார். இந்த மையத்தை முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோழி பண்ணையாளர்கள் மற்றும் வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.