Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுகோள்

தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுகோள்

தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுகோள்

தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுகோள்

ADDED : செப் 22, 2025 10:10 PM


Google News
உடுமலை,:

உடுமலை வழியாக, பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.

கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.

உடுமலையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு செல்ல தினமும் ஏராளமான மக்கள் ரயிலில் செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தற்போது செல்லும் ரயில்கள் போதுமானதாக இல்லை. இயக்கப்படும் இந்த ரயில்களில் அமர இடமின்றியும், நெருக்கடியில் செல்லும் நிலை ஏற்படுகிறது.

அடுத்த மாதம் சரஸ்வதி பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருகின்றன.

எனவே, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us