/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு கலைக்கல்லுாரியில் பொதுக்கலந்தாய்வு துவக்கம் அரசு கலைக்கல்லுாரியில் பொதுக்கலந்தாய்வு துவக்கம்
அரசு கலைக்கல்லுாரியில் பொதுக்கலந்தாய்வு துவக்கம்
அரசு கலைக்கல்லுாரியில் பொதுக்கலந்தாய்வு துவக்கம்
அரசு கலைக்கல்லுாரியில் பொதுக்கலந்தாய்வு துவக்கம்
ADDED : ஜூன் 04, 2025 09:01 PM

- நிருபர் குழு -
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், முதல் நாள் கலந்தாய்வில், 183 பேர் சேர்ந்துள்ளனர்.
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், இளநிலை பாடப்பிரிவு முதலாமாண்டு 864 இடங்கள் உள்ளன. முதலாமாண்டுக்கான மாணவர் சேர்க்கை, பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று முதல் நடக்கிறது.
நேற்று மதிப்பெண் அடிப்படையில், தரவரிசைப்பட்டியல், 1 முதல் 2,000 வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வில் இயற்பியல் 2, தாவரவியல் 4, கணிதவியல் 3, கம்ப்யூட்டர் சயின்ஸ் 29, அரசியல் அறிவியல் 5, புள்ளியியல் 4, பொருளியல் 7, பி.காம் 37, பி.காம்(சிஏ) 52, பி.காம் இ.காம் 10, பி.பி.ஏ 19 என மொத்தமாக, 183 மாணவர்கள் முதல் நாள் சேர்க்கை பதிவு செய்துள்ளனர்.
இன்று, 2001 முதல் 4000 வரை உள்ள தரவரிசைப்பட்டியல் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
வால்பாறை
வால்பாறையில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. மொத்தம் உள்ள, 520 இடங்களுக்கு, 9 பாடப்பிரிவுகளுக்கு 'ஆன்லைன்' வாயிலாக, மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த 2 மற்றும் 3ம் தேதிகளிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. நேற்று காலை முதல் பொதுக்கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.
கல்லுாரி முதல்வர் ஜோதிமணி கூறுகையில், ''வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடப்பாண்டு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, 13,167 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி வரை பொதுக்கலந்தாய்வு நடக்கிறது,'' என்றார்.