ADDED : ஜன 06, 2024 12:28 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு சார்பில், இலவச செயற்கை கால் அளவீடு செய்யும் முகாம், பூச்சக்காடு, செல்வ விநாயகர் கோவில் மண்டபத்தில், நாளை நடக்கிறது.
நாளை காலை, 9:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில், செயற்கை கால் அளவீடு செய்ய, மாற்றுத்திறனாளியின் போட்டோ, மாற்றுத்திறனாளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல்களை எடுத்துவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 93630 32998, 94433 25500 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, சக் ஷம் அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.