ADDED : ஜன 28, 2024 11:55 PM

பிரதமர் மோடி, 109வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
உரையை தமிழகம் முழுவதும் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் கேட்கும் வகையில் பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்திருந்தனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.,வினர் மாவட்டம் முழுவதும் உள்ள 1,033 பூத்களில் ஏற்பாடு செய்தனர். அதில், கருவம்பாளையம் மண்டல், 79வது பூத்தில், மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.