Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ நிழற்கூரை இல்லாமல்  மக்களுக்கு சிரமம் 

நிழற்கூரை இல்லாமல்  மக்களுக்கு சிரமம் 

நிழற்கூரை இல்லாமல்  மக்களுக்கு சிரமம் 

நிழற்கூரை இல்லாமல்  மக்களுக்கு சிரமம் 

ADDED : ஜூன் 30, 2025 10:32 PM


Google News
உடுமலை; தேவனுார்புதுார் சந்திப்பு பகுதியில், நிழற்கூரை வசதியில்லாததால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

உடுமலை - ஆனைமலை ரோட்டில், மாவட்ட எல்லையில், அமைந்துள்ள தேவனுார்புதுார் கிராமத்துக்கு, பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து, 20க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சுற்றுப்பகுதியில் இருந்து, இச்சந்திப்பு பகுதிக்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர்; அங்கிருந்து, கிராமங்களுக்கு செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அப்பகுதியில் நிழற்கூரை வசதியில்லை.

இதனால், மக்கள், பஸ்சுக்காக வெயிலிலும், அருகிலுள்ள கடைகளின் முன்புறமும் காத்திருக்க வேண்டியுள்ளது. காலை, மாலை நேரங்களில், மாணவர்கள், அதிகமாக பாதிக்கின்றனர்.

எனவே, உடுமலை ஒன்றிய நிர்வாகம், அச்சந்திப்பு பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிழற்கூரை அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us