
ஒவ்வொருவருக்கும் பொறுப்பு
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராம, நகர்ப்புறங்களில் பட்டி, தொட்டியெங்கும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும், கல்வி, சுகாதாரம், போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை, அரசு துறைகளுடன் இணைந்து நடத்தி வருகிறோம். 'போதைப்பொருட்கள் ஊடுருவியுள்ளது. பெட்டிக்கடை மற்றும் தனிநபர் மூலம் போதைப்பொருள் விற்பனை மறைமுகமாக நடக்கிறது' என்பதை அறிய முடிகிறது. போதைப் பொருள் விற்போர், கடத்துபவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும். போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து, பள்ளி, கல்லுாரி மாணவர்களை காக்க வேண்டிய பொறுப்பு, நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
தீர்வு தரும் 'தோப்புக்கரணம்'
பழங்காலத்தில் நம் முன்னோரின் பழக்கத்தில் இருந்தது, 'தோப்புக்கரணம்' தான். தினமும், 21 முறை சரியான முறையில் தோப்புக்கரணம் செய்வதன் வாயிலாக, உடல், உணர்வு மற்றும் மனம் ஆகியவை சரிவர இயங்கும். இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் வாயிலாக நல்ல எண்ணம் வளரும், தீய எண்ணங்கள் மறையும். தோப்புக்கரணம் என்பது ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையல்ல; மாறாக, மனதை ஒருநிலைப்படுத்தும் பரிசு என்பதை உணர வேண்டும்.நம்மை அறியாமலேயே நம்மை நல்வழிப்படுத்தும். போதைப்பழக்கத்தை வெறுக்கும் மனநிலை கூட வரும். பெற்றோர் தான் நமக்கு உறுதுணை என்ற மனநிலை, மாணவர்கள் மத்தியில் வர வேண்டும்.
குடியில் குடிநோய் புகாதிருக்க வேண்டும்
மது நீரின்றி அமையட்டும் புது உலகு