ADDED : மே 12, 2025 03:45 AM
வெள்ளகோவில்; வெள்ளகோவில், முத்துார், காங்கயம், புதுப்பை உள்ளிட்ட பகுதியில் இருந்து சாகுபடி செய்யப்படும் முருங்கைகள் வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் மூலம் பல சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த வாரம், 4 டன் வந்தது. கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, 3 டன் வந்தது. கரும்பு, செடி மற்றும் மர முருங்கை, 75 ரூபாய்க்கு விற்பனையானது. சில வாரங்களாக வரத்து குறைவு காரணமாக, விலை அதிகமாகியுள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.