Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேங்காய் விலை உயர்வு நிரந்தரமானதா?

தேங்காய் விலை உயர்வு நிரந்தரமானதா?

தேங்காய் விலை உயர்வு நிரந்தரமானதா?

தேங்காய் விலை உயர்வு நிரந்தரமானதா?

ADDED : ஜூன் 15, 2025 11:40 PM


Google News
'தினம், தினம் புதிய உச்சம் தொடும் தேங்காய் கொப்பரை விலை, நீடித்த நிலையானதாக இருக்குமா,' என்ற கேள்வி, விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் பெருமளவில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வாயிலாக, தேங்காய் கொப்பரை விற்பனை செய்யப்படும் நிலையில், இதுவரையில்லாத வகையில் விலை அதிகரித்துள்ளது.

தினம் தினம் புதிய உச்சம் காணும் தேங்காய் கொப்பரை விலையில், முதல் தர கொப்பரை, கிலோவுக்கு, 220 ரூபாயை தாண்டியிருக்கிறது. இந்த விலையேற்றம் நீடிக்குமா அல்லது குறையுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.

பாமாயில், சோயாபீன்ஸ், சூரியகாந்தி ஆகிய கச்சா சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை, 27.5 சதவீதத்தில் இருந்து, 16.5 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருக்கிறது. அதேநேரம், வெளிநாடுகள், வட மாநிலங்களில் தேங்காய்க்கான கிராக்கி அதிகரித்திருக்கிறது. இவை, பயோ டீசல் உற்பத்திக்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இவைதான், தேங்காய் கொப்பரை விலையேற்றத்துக்கு காரணம். இது நீடிக்கும்.

- பிரபு ராஜா, மாநில தலைவர், தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us