ADDED : ஜூன் 30, 2025 04:23 AM
சத்தியமங்கலம்:இ.கம்யூ., ஈரோடு வடக்கு மாவட்ட மாநாடு, சத்தியமங்க-லத்தில் நேற்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., சுந்தரம் தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் பெரியசாமி சிறப்-புரையாற்றினார்.
ஈரோடு-கோபி-சத்தி, சத்தி-அந்தியூர்-மேட்டூர் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பவானி ஆற்று நீர் மாசடைவ-தையும், கழிவு நீர் கலப்பதை மாநில அரசு தடுக்க வேண்டும். பாண்டியாறு-மோயாறு இணைப்பை செய்து பவானிசாகர் அணையை ஆண்டு முழுவதும் தண்ணீர் திறக்க செய்ய வேண்டும். மலைப்பகுதிகளில் பட்டா வழங்க விதிக்கப்பட்ட தடையிலிருந்து விலக்களித்து, தாளவாடி, கடம்பூர், பர்கூர் மலைப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்-பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.