/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் அபராதம் அதிகரிப்புபுகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் அபராதம் அதிகரிப்பு
புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் அபராதம் அதிகரிப்பு
புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் அபராதம் அதிகரிப்பு
புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் அபராதம் அதிகரிப்பு
ADDED : பிப் 12, 2024 12:28 AM
உடுமலை;தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது விதிக்கப்படும் அபராதத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது
தமிழகத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், புகையிலை பொருள் விற்பனை செய்யும் கடைகளுக்கு முதல் முறை 5 ஆயிரம், இரண்டாவது முறை 10 ஆயிரம், மூன்றாவது முறை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடப்பட்டது.
தற்போது, அபராதத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, முதல் முறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 15 நாட்களுக்கு உரிமம், பதிவு ரத்து; இரண்டாவது முறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு மாதம் பதிவு ரத்து, மூன்றாவது முறைக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், 90 நாட்களுக்கு பதிவு, உரிமம் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது குறித்து, திருப்பூர் மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
புதிய அபராதம் விதிப்பு நடைமுறைக்கு வந்த பின், கடந்த ஜன., 5ம் தேதி முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 25 கடைகள் கண்டறியப்பட்டு, 236 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முதல்முறை புகையிலை பொருள் விற்பனை செய்த, 24 கடைகளுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், 6 லட்சம் ரூபாய்; இரண்டாவது முறை விதிமீறிய கடைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் என, மொத்தம் 6.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு, கடைகள் மூடப்பட்டுள்ளன.
அபராத தொகை செலுத்தியதற்கான ரசீதுடன், நோட்டரி பப்ளிக் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய பின்னர்தான், கடையை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றவர் எனில், சிவில் வழக்கு பதிவு செய்யப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.