/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பட்டய கணக்காளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்புபட்டய கணக்காளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
பட்டய கணக்காளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
பட்டய கணக்காளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
பட்டய கணக்காளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : பிப் 25, 2024 12:39 AM

திருப்பூர்:இந்திய பட்டய கணக்காளர் சங்க திருப்பூர் கிளை புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.
இச்சங்கத்தின் 2024 - 25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் சிவாச்சலம், தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் ஜலபதி, சிவகங்கை அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் செண்பகநாதன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பிராந்திய குழு உறுப்பினர்கள் அருண், ராஜேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் சரவண ராஜா, செயலாளர் தருண் முன்னிலை வகித்தனர். வரும் நிதியாண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர்.
அவ்வகையில், தலைவராக செந்தில்குமார், துணை தலைவர் சோனியா குமாரி குப்தா, செயலாளர் தருண்; பொருளாளர் மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர். மேலும், சரவணராஜா மாணவர் பிரிவு தலைவர், வரதராஜன் உறுப்பினர், ராஜேஷ் பிராந்திய உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர்.
புதிய நிர்வாகிகளாக பதவியேற்றவர்களுக்கும், திருப்பூர் சங்கம் தென்னிந்திய அளவில் சிறப்பான செயல்பாட்டுக்காக தேர்வு செய்யப்பட்டதற்கும் சங்க உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.