எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்; துரைமுருகன் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!
எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்; துரைமுருகன் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!
எங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறார்; துரைமுருகன் மீது மார்க்சிஸ்ட் பாய்ச்சல்!

மேல்முறையீடு
துரைமுருகனின் இந்த அறிவிப்பு, எங்களை போன்றவர்களை பெரிய இக்கட்டான நிலைக்கு தள்ளி இருக்கிறது. குறைந்தபட்சம் அரசியல் கட்சிகளுக்கு எதிரான இந்த தீர்ப்பு சம்பந்தமாக, மாநில அரசே சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து இருக்கலாம்.
என்ன காண்டு?
இந்த அரசியல் கட்சிகள் மேல், நீதிபதிகளுக்கு எல்லாம் என்ன காண்டு என்று தெரியவில்லை. சமீப காலமாக ரொம்ப மோசமாக எல்லை மீறி போய் கொண்டு இருக்கிறார்கள். நான் கேட்பது, சமீப காலமாக தி.மு.க.,வுக்கு இது சொந்த பிரச்னையா? தி.மு.க.,விற்கு மட்டுமான பிரச்னையா இது, குறைந்தபட்சம் கலந்து பேச வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.
10 என்றால் 150!
எங்களுக்கு 10 கொடிகம்பங்கள் இருக்கு என்றால், உங்களுக்கு 150 கொடிகம்பங்கள் இருக்கிறது. அரசியல் கட்சி என்றால் அதற்கு என்று கொடி, இது எல்லாம் ஏற்கனவே சட்டத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் விஷயம். போக்குவரத்திற்கு இடையூறாக இருக்க கூடாது என்று சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
நக்கல், நையாண்டி
போக்குவரத்திற்கு இடையூறாக யாராவது ஒரு கொடிகம்பத்தை ஏற்றுகிறார்கள், நடுகிறார்கள் என்று சொல்லுங்கள் அதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. துரைமுருகன், 'நான் எனது கட்சி காரர்களுக்கு சொல்கிறேன், நீ ஏன்யா கேள்வி கேட்கிற' என்று சொல்லலாம். என்னை பார்க்கும் போது கேட்கலாம். அவரு அந்த மாதிரி எல்லாம் கொஞ்சம் நக்கல், நையாண்டி எல்லாம் பேசுகிற தலைவர் தான். இவ்வாறு அவர் கூறினார்.