/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜி.எஸ்.டி., குறைப்பு; பொருட்கள் விலை குறையும்! பொதுமக்கள் வரவேற்பு ஜி.எஸ்.டி., குறைப்பு; பொருட்கள் விலை குறையும்! பொதுமக்கள் வரவேற்பு
ஜி.எஸ்.டி., குறைப்பு; பொருட்கள் விலை குறையும்! பொதுமக்கள் வரவேற்பு
ஜி.எஸ்.டி., குறைப்பு; பொருட்கள் விலை குறையும்! பொதுமக்கள் வரவேற்பு
ஜி.எஸ்.டி., குறைப்பு; பொருட்கள் விலை குறையும்! பொதுமக்கள் வரவேற்பு

வளர்ச்சி விகிதம் சிறக்கும்
குணசேகரன், வாகன விற்பனையாளர், திருப்பூர்: ஜி.எஸ்.டி., திருத்தங்கள் வரவேற்கக்கூடிய வகையில் உள்ளது. வாகனங்களுக்கான வரிகள் 28ல் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய வாகனம் வாங்குவோர் பலன் பெறுவர். அதே போல், வாகனங்களுக்கு அனைத்து வகை உதிரிபாகங்களுக்கும் 28ல் இருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி., வரி விதிப்பு என்பது வாகன உரிமையாளர்களுக்கும், உதிரிபாக விற்பனையாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நடுத்தர குடும்பங்களுக்கு நன்மை
ஜனனி, சி.ஏ., இறுதியாண்டு மாணவி, திருப்பூர்: 'ஜி.எஸ்.டி., - 2.0'-ல், அனைத்து தரப்பினருக்கும் பயன் தரக்கூடிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இல்லத்தரசியர் மகிழ்ச்சி
தனலட்சுமி, அர்த்தநாரி வீதி, திருப்பூர்: ஜி.எஸ்.டி., குறைப்பு சிறந்த முடிவு. எங்களை போன்ற இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான விஷயம். தினசரி பயன்படுத்த கூடிய ஹேர் ஆயில், சோப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள், பெண்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் என பலவற்றுக்கு ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு சிறந்த சேமிப்பாக இருக்கும். ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு செய்த மத்திய நிதியமைச்சர் மற்றும் பிரதமருக்கு இல்லத்தரசிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
ஒரே விகிதமாக இருக்கட்டுமே!
சுரேஷ், உரிமையாளர், மின்னணுப்பொருட்கள் நிறுவனம், திருப்பூர்: வீட்டில் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப்பொருட்கள், பெண்கள் பயன்படுத்த கூடிய பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. மருத்துவம் சார்ந்த பொருட்களுக்கு வரி குறைத்துள்ளனர். அனைத்துக்கும் ஒரே வரிவிகிதம் கொண்டு வந்தால் சிறப்பு.
பல தரப்பட்டோருக்கும் பயன்
கந்தசாமி, பல்பொருள் அங்காடி உரிமையாளர், திருப்பூர்: ஜி.எஸ்.டி., குறைப்பு வரவேற்கத்தக்கது. வியாபாரிகள் மட்டுமல்ல; மக்களும் பயனடைவர். நிறுவனங்கள் வரி குறைப்பின் காரணமாக பொருட்களின் விலையை குறைக்க வாய்ப்பு அதிகம். தற்போது 45 ரூபாய் மதிப்பில் விற்பனையாகும் ஒரு சோப்பு, 40 ரூபாயாகக் குறையலாம்.
இன்சூரன்சுக்கு விலக்கு சிறப்பு
வினோத் ராமசாமி, அவிநாசி: ஜி.எஸ்.டி.,யில் இருந்து, எல்.ஐ.சி., மருத்துவ காப்பீடு உள்ளிட்ட இன்சூரன்ஸ்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் ரூபாய் மருத்துவ காப்பீட்டிற்கு என பிரிமியம் தொகை செலுத்தும் போது 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டியிருந்தது. மருத்துவம் மற்றும் விபத்து காப்பீடு, எல்.ஐ.சி.,ல் முதலீடு செய்பவர்கள் கூட சற்று யோசித்தனர். மருத்துவம், ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு, இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
5 - 10 சதவீதமே போதும்
ஸ்ரீதேவி, - ராயன்கோவில் காலனி, அவிநாசி: பெரும் பொருளாதார நாடுகளை போல ஐந்து முதல் பத்து சதவீதம் வரி இருந்தாலே போதுமானது. 18 சதவீதம் என்பது மக்கள் மீது மறைமுகமாக சுமத்தப்படும் பாரம். அத்தியாவசியமாக விளங்கும் பால், அதன் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு முற்றிலுமாக வரி விலக்கு அளிக்கலாம்.