ADDED : மார் 24, 2025 05:09 AM

திருமுருகன் பூண்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியன இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.
சுகன் சுகா மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் பெரியாயிபாளையம் சிட்டி ஸ்மைல் பல் மருத்துவமனை இணைந்து இலவச பல் சிகிச்சை முகாம் ஆகியவையும் நடந்தன. முகாமில் 431 பேர் பங்கேற்று பயனடைந்தனர். இலவச கண் அறுவை சிகிச்சைக்கு 40 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.