ADDED : மார் 24, 2025 05:10 AM
சிகரங்கள் அறக்கட்டளையின், 90வது ரத்த தானம் முகாம் நல்லுாரில் நேற்று நடந்தது. மக்களிடமிருந்து பெறப்பட்ட, 30 யூனிட் ரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ரேவதி மருத்துவமனை சார்பில், நடமாடும் 'இதயம் காப்போம்' பஸ் மூலம் இலவச இருதய பரிசோதனை நடந்தது. 37 பேர் பரிசோதனை செய்தனர்.
18 பேர் குறைகள் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 128 பேர் சர்க்கரை ரத்த அழுத்தம் மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர். ஐ பவுண்டேசன் சார்பில் நடந்த கண் பரிசோதனை முகாமில், 58 பேர் பங்கேற்றனர். ஏழு பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.