/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அழகு கலை இலவச பயிற்சி நாளை நடக்குது நேர்காணல் அழகு கலை இலவச பயிற்சி நாளை நடக்குது நேர்காணல்
அழகு கலை இலவச பயிற்சி நாளை நடக்குது நேர்காணல்
அழகு கலை இலவச பயிற்சி நாளை நடக்குது நேர்காணல்
அழகு கலை இலவச பயிற்சி நாளை நடக்குது நேர்காணல்
ADDED : மே 16, 2025 12:43 AM
திருப்பூர், ;கனரா வங்கி தொழிற்பயிற்சி மையம் சார்பில் நடத்தப்படும், அழகு கலை இலவச பயிற்சியில் சேர நாளை நேர்காணல் நடைபெறவுள்ளது.
கனரா வங்கி தொழிற் பயிற்சி மைய இயக்குநர் சதீஷ்குமார் அறிக்கை: திருப்பூர், காங்கயம் ரோடு, முதலிபாளையம் பிரிவில் உள்ள, கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான அழகு கலைப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி 35 நாட்களுக்கு முழு நேரப் பயிற்சியாக நடத்தி, சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கான நேர்காணல் நாளை 17ம் தேதி நடைபெறும்.
எழுதப் படிக்கத் தெரிந்த, 18 முதல் 45 வயதுக்குட்பட்ட, பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு எந்த கட்டணமும் இல்லை; முற்றிலும் இலவசம். பயிற்சியின் போது, காலை மற்றும் -மாலை தேநீர்; மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் சுய தொழில் துவங்க கடன் பெற வழிகாட்டுதல் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, விஜயாபுரம், திருப்பூர் - 641606, என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ் மற்றும் ஆவணங்களுடன் நேரில் வரவும்.
மேலும் விவரங்களுக்கு, 99525 18441, 86105 33436 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.