ADDED : பிப் 24, 2024 12:15 AM
திருப்பூர் மாநகராட்சி, 2வது மண்டலம், 3வது வார்டு பகுதியில் அம்மன் நகர் உள்ளது. இதன் பிரதான ரோட்டில் உரிய வடிகால் வசதி இல்லை. இதற்காக, 'நமக்கு நாமே' திட்டத்தில் பணி செய்ய, 4.65 லட்சம் ரூபாயில் மதிப்பிடப்பட்டது.
அவ்வகையில், பொதுமக்கள் பங்களிப்பு 1.55 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. இதற்கான வரைவோலை நேற்று மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கப்பட்டது. துணை மேயர் பாலசுப்ரமணியம், முன்னாள் கவுன்சிலர் நடராஜன், கருப்பசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.