Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வரும் 13ம் தேதி கொடிசியாவில் 'டபுள் டக்கர் அக்வாரியம்' துவக்கம்

வரும் 13ம் தேதி கொடிசியாவில் 'டபுள் டக்கர் அக்வாரியம்' துவக்கம்

வரும் 13ம் தேதி கொடிசியாவில் 'டபுள் டக்கர் அக்வாரியம்' துவக்கம்

வரும் 13ம் தேதி கொடிசியாவில் 'டபுள் டக்கர் அக்வாரியம்' துவக்கம்

ADDED : ஜூன் 10, 2025 06:30 AM


Google News
திருப்பூர்:

கோவை கொடிசியா மைதானத்தில், வரும் 13ம் தேதி, 'அண்டர் வாட்டர் டனல் டபுள் டக்கர் அக்வாரியம்' துவங்குகிறது.

'தி ஓசன்' உருவாக்கத்தில் நடக்கும் கண்காட்சியை, நடிகை நிக்கி கல்ராணி, அன்று மாலை 5:00 மணிக்கு துவக்கி வைக்கிறார். 'முழுவதும் குளிரூட்டப்பட்ட அரங்கில் நடக்கும் கண்காட்சியில், கடல் படுக்கையின் வண்ணமயமான காட்சிகளை காணலாம். லட்சக்கணக்கான மீன்களை கொண்ட சுரங்கங்கள், பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடும் ரோபோடிக் நாய்குட்டிகள், கடல் கன்னிகள், ஜன்னலுக்குள் மனிதனும், மீனும் பழகும் காட்சிகளை காணலாம்.

இதுகுறித்து ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:

வெளிநாட்டு விளையாட்டு அம்சங்கள் உட்பட மக்களை கவரும் வகையிலான பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சமையலறை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை, 10 ரூபாயில் இருந்து வாங்கலாம். உலகத்தரம் வாய்ந்த பர்னிச்சர்களின் மெகா விற்பனை மேளா நடக்கிறது. 70 சதவீதம் வரை தள்ளுபடியில் மெத்தை, பர்னிச்சர் பொருட்கள், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். நுழைவுக் கட்டணமாக, 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 149 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் மதியம், 2:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, விடுமுறை நாட்களில் காலை 11:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை செயல்பட உள்ளது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us