Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கிருமிநாசினி தெளித்து குப்பை கொட்டும் பணி

கிருமிநாசினி தெளித்து குப்பை கொட்டும் பணி

கிருமிநாசினி தெளித்து குப்பை கொட்டும் பணி

கிருமிநாசினி தெளித்து குப்பை கொட்டும் பணி

ADDED : மார் 28, 2025 03:28 AM


Google News
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி சார்பில், பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள ஒரு பாறைக் குழியில் கொட்டப்பட்டு வருகிறது.

குப்பை கொட்டும் போது, நிலத்தடி நீர் பாதிக்காத வகையிலும், துர்நாற்றம் வீசாத வகையிலும் மற்றும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் பராமரிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி கூறினர்.

இந்நிலையில், கடந்த வாரம் அப்பகுதியினர் நுாற்றுக்கு மேற்பட்டோர் 'குப்பையில் இருந்து துர்நாற்றம் வருகிறது. கிருமிநாசினி தெளிப்பதில்லை.

முறையாக மண் போடுவதில்லை,' என கூறி குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள், கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

லாரி மூலம் மண் கொண்டு வரப்பட்டு, குப்பை மீது போடும் பணியில் ஈடுபட்டனர். தீவிர பராமரிப்பு பணியை தொடர்ந்து, தற்போது மீண்டும் குப்பை கொட்டும் பணி நடந்து வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us